Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எந்த நடவடிக்கையும் எடுக்கல…. ஆத்திரமடைந்த பொதுமக்கள்…. ஊராட்சி அலுவலகம் முற்றுகை….!!

அடிப்படை நடவடிக்கைகளை செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள உலையூர் வடக்கு கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம், மயான வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவை முறையாக செய்து தர வலியுறுத்தி அப்பகுதியில் பல்வேறு முறை ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன் மற்றும் துணை அலுவலர் கருப்பையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் உலையூர் பகுதியில் அடிப்படை நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்த பின்னரே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |