தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்காக அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும், வார்டுகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் தேர்தல் பணிகளுக்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையில் தேர்தல் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் நாளன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுப்பதில் ஏதும் மறுப்பு இருந்தால் புகார் அளிக்கலாம். இது தொடர்பாக பெறப்படும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் முத்து(அமலாக்கம்) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் உதவி கமிஷனருக்கு 94892 14157 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதேபோன்று பேர்லண்ட்ஸ், 5 ரோடு பகுதியினர், அன்பழகன் -97873 79061, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சிக்கு, கிருபாகரன்- 90424 08228, பழைய பஸ் ஸ்டாண்ட், சீலநாயக்கன்பட்டி, மல்லூர், பனமரத்துப்பட்டி வாசுகி – 70107 00791, செவ்வாய்ப்பேட்டை, மணியனூர், அன்னதானப்பட்டி சீனிவாசன்- 94427 38822, திருச்சி பிரதான சாலை, குகை, எருமாபாளையம், கொண்டலாம்பட்டி, ஆட்டையாம்பட்டி இளையராஜா- 82489 38528, அம்மாபேட்டை, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், வீராணத்துக்கு அருண்குமார்- 93445 84351, ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் தாலுகாவுக்கு சிவக்குமார்- 73735 32073, மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி தாலுகாவில் சங்கர்- 86809 03516 போன்றோரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.