தடுப்பூசி போடாத 50 வயதிற்கு மேலான பணியாளர்களுக்கு வேலை தடை செய்யப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளை வாட்டி வதைக்கும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இதனால் கொரோனாவின் அளவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இத்தாலி நாட்டில் 50 வயதிற்கு மேலானோர் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என ஜனவரி மாதம் தொடக்கத்திலேயே அமைச்சரவை கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது. அதில் 50-க்கும் மேலானோர் பிரிவில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதல் காண்பிக்க வேண்டும் அல்லது தடுப்பூசி விளக்கு சான்றிதல் காண்பிக்க வேண்டும்.
இதனையடுத்து தடுப்பூசி போடாத 50 வயதுக்கு மேலான பணியாளர்களுக்கு வேலை தடை செய்யப்படும். அத்துடன் சம்பளம் பிடிப்பு மற்றும் ரூ 1.19 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இம்மாதிரியான நடைமுறையால் 5 லட்சம் பேர் வரை பாதிப்படையலாம். மேலும் இந்த நடைமுறையானது இன்று முதல் இத்தாலி நாட்டில் அமலுக்கு வருகிறது.