Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்கப்படும்…. விளம்பர பலகை வைக்கக்கூடாது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

அரசின் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அரசின் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என அறிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்பை மீறி 3 திருமண மண்டபங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரத்தநாடு தாலுகாவிலும்  8 விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விளம்பர பலகைகள் வைத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து  விளம்பர பலகைகளை அச்சடித்த நிறுவனங்கள்  மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  காவல்துறையினருக்கு மாவட்ட  ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |