Categories
மாநில செய்திகள்

3-வது நாளாக கட்சி நிர்வாகிகளை நீக்கிய திமுக…. என்ன காரணம்?… பெரும் பரபரப்பு…..!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட்ட மேலும் 18 பேரை அடிப்படை உறுப்பினர் & அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் 56, நேற்று 52 பேரை கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் இன்று 18 வேரை நீக்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |