Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தற்கொலை செய்ய வந்தேன்” விசாரணையில் தெரிந்த உண்மை…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தற்கொலை செய்யும் நோக்கத்தோடு கொடைக்கானலுக்கு சென்ற நபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானலுக்கு 50 வயது மதிக்கத்தக்க நபர் சென்றுள்ளார். அந்த நபர் வட்டகானல் அருகே டால்பின் நோஸ் பகுதிக்கு சென்று திடீரென அங்குள்ள பாறைக்கு அருகில் படுத்துக் கொண்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் சென்னை மாவட்டத்தை சேர்ந்த வியாபாரியான சாதிக் பாட்சா என்பது தெரியவந்துள்ளது. மேலும் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு டால்பின் நோஸ் பகுதிக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சாதிக் பாட்சாவை எச்சரித்து காரில் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |