Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சத்திய நாராயண லேஅவுட் திருவள்ளுவர் நகரில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கர் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு சங்கர் அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |