சிஎஸ்கே 21 வீரர்களை ஏலம் எடுத்தது தொடர்பான முழுவிபரம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 15 சீசனுக்கான மெகா ஏலமானது கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் பழைய வீரர்களை வாங்க கடுமையாக போராடியதால், முன்னணி வீரர்களை கூட கண்டுகொள்ளவில்லை. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 21 பேரை சிஎஸ்கே வாங்கியுள்ளது.
அவர்கள் குறித்த விவரம்,
ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, டிவோன் கான்வே, சுப்ரன்ஷு சேனாபதி, ஹரி நிஷாந்த், என்.ஜெகதீசன், மகேந்திரசிங் தோனி ஆகிய பேட்ஸ்மேன்களை சிஎஸ்கே வாங்கியுள்ளது. இதனை அடுத்து மிட்செல் சாண்ட்னர், கிறிஸ் ஜோர்டன், பகத் வர்மா,டுவைன் பிராவோ, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கெகர், டுவைன் பிரிடோரியஸ்,ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி போன்ற ஆல்-ரவுண்டர்களை சிஎஸ்கே வாங்கியுள்ளது.
மேலும் பிரசாந்த் சோலாங்கி,துஷர் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, சிமர்ஜித் சிங், ஆடம் மில்னே, முகேஷ் சௌத்ரி,தீபக் சஹார், கேஎம் ஆஷிப் ஆகிய பௌலர்களை சிஎஸ்கே வாங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 2.95 கோடி மீதம் இருந்தும் சிஎஸ்கே, 2 கோடி பிரிவில் இடம்பெற்ற சுரேஷ் ரெய்னாவை வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.