மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேர்தல் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் நடைபெற்று வருகின்ற வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தப்பட்டு வரும் பணியை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் நகராட்சி தேர்தல் அலுவலர் பாஸ்கரன், தேர்தல் பொறுப்பாளர் கல்யாணம் குமார், தாசில்தார் அறிவழகன் உள்ளிட்ட பலர் ஆட்சியருடன் கலந்து கொண்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பணியாளர்களிடம் பணி சரியாக நடைபெறுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.