Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19-ஆம் தேதி…. வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருகின்ற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு வரும் பிப்ரவரி 19-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

Categories

Tech |