Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய பெருமை…. ஊர்க்காவல் படையில் கலக்கும் திருநங்கைகள்….!!!

கோவை மாவட்ட ( ஊரக ) காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வநாகரத்தினம் அறிவுறுத்தலின்படி ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 110 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் 15 திருநங்கைகள் பங்கேற்றனர். இந்த நிலையில் சுஜித்ரா பன்னீர்செல்வம் (27) , எஸ்.மஞ்சு (29), பி.வருணஸ்ரீ (21) ஆகிய மூன்று திருநங்கைகள் ஊர்க்காவல் படை பிரிவில் தேர்வாகினர்.

இதையடுத்து பயிற்சி 45 நாட்களாக நடைபெற்ற நிலையில் இவர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை ( பிப்.12 ) அன்று பணியில் சேர்ந்தனர் என்று கோவை மாவட்ட ஊர்க்காவல் படையின் பகுதி தளபதி பாலாஜி ராஜு கூறியுள்ளார். மேலும் தற்போது கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் 52 பெண்கள், 332 ஆண்கள், 3 திருநங்கைகள் என மொத்தம் 387 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

Categories

Tech |