Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தந்தையை பார்க்க சென்ற சிறுவன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

சாலையை கடக்கும் போது சரக்கு வேன் மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஅள்ளி பகுதியில் இம்ரான் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில்இருக்கும் ஒரு பழகடையில் வேலை பார்த்து வருகிறார்.  இவருக்கு 10 வயதுடைய ஷேக் அமானு என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் ஷேக் அமானு தனது தந்தையை பார்ப்பதற்காக பாலக்கோட்டிற்கு சென்றுள்ளான். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் சாலையை கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாக வேகமாக வந்த சரக்குவேன் ஷேக் அமானு மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு  படுகாயமடைந்த சேக் அமானுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து வழக்குப்பதிவு செய்த   காவல்துறையினர் சரக்கு வேன்  டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |