தீயணைப்பு மீட்பு படை பயிற்சியாளர்கள் உறைந்த பனியில் சிக்கிய சிறுவர்களை மீட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியில் தான் தீயணைப்பு படையினர் வழக்கமாக மீட்பு பணி பயிற்சியில் ஈடுபட்டு வருவார்கள். மேலும் ஏரியில் உள்ள நீர் கடும் பனிப்பொழிவால் உறைந்திருந்தது. அப்போது இரு சிறுவர்கள் பனி உறைந்த ஏரியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கு தீயணைப்பு படையினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சிறிது தூரத்தில் அந்த சிறுவர்கள் திடீரென பனி உடைந்து குளிர்ந்த ஏரிக்குள் விழுந்து விட்டனர்.
அந்த சிறுவர்கள் குளிர் தாங்க முடியமல் மீட்புப் படையினரை உதவிக்கு அழைத்துள்ளனர். இந்த சத்தத்தைக் கேட்டு தீயணைப்பு படை பயிற்சியாளர்கள் விரைந்து வந்து உறைந்த பனியில் சிக்கிய சிறுவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சிறுவர்கள் உறைந்த பனியில் இருந்ததால் கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு சென்று விட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.