Categories
உலக செய்திகள்

ஐ.நா. ஊழியர்கள், பத்திரிக்கையாளர்களை சிறைபிடித்த தலீபான்கள்…. உச்சகட்ட பரபரப்பில் ஆப்கான்….!!

ஐ.நா. ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை தலீபான்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தொடங்கினார்கள். அன்று முதல் அங்கு மிக கடுமையான மனித நெருக்கடி நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின்  ஊழியர்கள் அங்கு முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.நா ஆணையத்துடன்  இணைந்து பணியாற்றி வந்த 2 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் ஆணையத்தின் ஊழியர்கள் பலரை தலைநகர் காபூலில் நேற்று காலை தலீபான்கள் சிறை பிடித்துள்ளனர். இது பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தலிபான்கள் அரசின் தகவல் மற்றும் கலாச்சார இணை மந்திரி ஜபிஹூல்லா  முஜாகித் இது குறித்து  பேசுகையில் “ஐநா ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களிடம் தாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்துவதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டனர்” என கூறினார்.

Categories

Tech |