வனதுர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் பகுதிக்கு அருகில் வன துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாட்டு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அம்மனுக்கு சிறப்பான பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
அதன்பிறகு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு பூஜையை கோவில் அர்ச்சகர் மற்றும் கிராம பொதுமக்கள் சேர்ந்து நடத்தியுள்ளனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வனதுர்க்கை அம்மனை சிறப்பாக வழிபாடு செய்தனர்.