தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 2-ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையடுத்து சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 16 முதல் மார்ச் 2 வரை புதிய ஊரடங்கு தளர்வுகள் அமல் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..