Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் பலனில்லை…. பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் வாழ்வில் விரக்தியடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வள்ளியப்பம்பட்டியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகின்றார். கூலித்தொழிலாளியான இவருக்கு நிர்மலா (43) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடமாக நிர்மலா உடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் உடல்நிலை சற்றும் குணமடையாததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த நிர்மலா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக நிர்மலாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |