தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,086-பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 31 ஆயிரத்து 154-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து 14,051- பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 514 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.