பிரேம்ஜி மற்றும் பிரபல பாடகி வினைதா திருமணம் செய்துகொள்ளப்போவதாக வந்த செய்தி வதந்தி என வினைதா கூறியுள்ளார்.
பிரேம்ஜி நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் இயக்குனர் கங்கை அமரனின் இரண்டாவது மகனும் வெங்கட்பிரபுவுக்கு சகோதரரும் ஆவார். இவர் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். மேலும் இவர் அண்ணன் வெங்கட் பிரபுவின் படத்தில் கண்டிப்பாக ஒரு சிறிய வேடத்தில் நடித்து விடுவார். இறுதியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிரேம்ஜிக்கு 42 வயதாகிறது. இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் யுவன் சங்கர் ராஜா அவரிடம் துணை இயக்குனராக தன் இயக்குனர் பயணத்தை தொடங்கினார்.
இவருக்கு கடந்த சில வருடங்களாகவே பெண் பார்த்து வருகின்றனர். பிரேம்ஜி தனது இணையதளத்தில் தானொரு முரட்டு சிங்கில் என கூறிவந்தார்.அண்மையில் பிரேம்ஜி ஒரு பாடகியுடன் டேட்டிங்கில் இருப்பதாக புகைப்படத்துடன் தகவல் வெளியாகி இருந்தது . இதுகுறித்து வினைதா விளக்கம் அளித்திருக்கிறார். பிரேம்ஜி எனக்கு நல்ல தோழன். நாங்கள் இருவரும் போட்டோக்களை பதிவு செய்யும்போது பாடல் வரிகளில் அத்துடன் இணைப்பது வழக்கமான ஒன்றுதான் எனக் கூறியிருக்கிறார். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற செய்தி வதந்திதான் என்று கூறியுள்ளார். யாரோ நாங்கள் இருவரும் சேர்த்திருக்கும் புகைப்படத்தை பரப்பிவருகின்றனர். பிரேம்ஜியை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை என கூறியிருக்கிறார்.