Categories
அரசியல்

எந்தெந்த மாதத்தில் என்னென்ன பயிர்களைப் பயிரிடலாம்?…. இதோ முழு விவரம்….!!!

நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகிப்பது விவசாயம். விவசாயத்தைப் பொறுத்தவரையில் பட்டம் என்பது காலநிலை. அதனால் குறிப்பிட்ட காலநிலைக்கு ஏற்றவாறு பயிர்கள் பயிர் இடுவது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக ஆடிப்பட்டத்தில் தானிய பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்வார்கள். இதனைத் தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், அடுத்தடுத்து மாற்று பயிர்களை விளையச் செய்யும் போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க் கிருமிகள் புது பயிரை அதிகம் தாக்காது. மனிதர்களுக்கு சரிவிகித உணவு வழங்குவதில் காய்கறிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு உதவும் உயிர் சத்துக்கள், தாது உப்புக்கள், நார்ச்சத்துக்களை வழங்குவதோடு சக்திக்கு தேவைப்படும் உணவுச் சத்துகளை நமக்கு அதிக அளவில் கொடுக்கிறது.

அதனால் மாத வாரியான உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தை தேவையை கருத்தில் கொண்டு, அதிக லாபம் பெறும் நோக்கத்தில் மாதாந்திர காய்கறிகளில் விலை விபரங்களை நன்றாக அறிந்து பயிரிட வேண்டுவது அவசியம். அவ்வகையில் எந்த மாதத்தில் எந்த பயிர்களை பயிரிட வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

ஜனவரி: (மார்கழி, தை)

இந்த மாதத்தில் கத்தரி, மிளகாய், பாகற்காய், தக்காளி, பூசணி, சுரைக்காய், முள்ளங்கி, கீரைகள், வெங்காயம், அவரை, கொத்தவரை மற்றும் கரும்பு போன்றவற்றை பயிரிடலாம்.

பிப்ரவரி: (தை, மாசி)

இந்த மாதத்தில் கத்தரி, தக்காளி, மிளகாய், பாகற்காய், சுரக்காய், கொத்தவரை, வெண்டைக்காய், பீர்க்கங்காய், அவரை, சூரியகாந்தி, கீரைகள், உளுந்து, கோவைக்காய், கம்பு, நாட்டு தீவனம், பருத்தி மற்றும் கரும்பு போன்றவற்றை பயிரிடலாம்.

மார்ச்: (மாசி, பங்குனி)

இந்த மாதத்தில் வெண்டை, கோவை, பாகற்காய், கொத்தவரை, தக்காளி, பீர்க்கங்காய், சூரியகாந்தி, உளுந்து, நாட்டுச் சோளம், பருத்தி, கத்தரி மற்றும் கம்பு போன்றவற்றை பயிரிடலாம்.

ஏப்ரல்: (பங்குனி, சித்திரை)

இந்த மாதத்தில் செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், அவரை, எள், கம்பு மற்றும் நாட்டுச்சோளம் போன்றவற்றை பயிரிடலாம்.

மே: (சித்திரை, வைகாசி)

இந்த மாதத்தில் செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை, வெங்காயம், அவரை, எள் மற்றும்  நாட்டுச்சோளம் போன்றவற்றை பயிரிடலாம்.

ஜூன்: (வைகாசி, ஆனி)

இந்த மாதத்தில் கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை, கொத்தவரை, தென்னை போன்றவற்றை பயிரிடலாம்.

ஜூலை: (ஆனி, ஆடி)

இந்த மாதத்தில் மிளகாய், பாகற்காய், சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, புடலை, எள், சூரியகாந்தி, உளுந்து, தென்னை, தட்டப்பயறு, துவரை, மொச்சை மற்றும்  பாசிப்பயறு போன்றவற்றை பயிரிடலாம்.

ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி)

மாதத்தில் இந்த முள்ளங்கி, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், வெண்டை, சுரைக்காய், அவரை, கத்தரி, மிளகாய், சூரியகாந்தி, பருத்தி, பாசிப்பயறு, துவரை, மொச்சை போன்றவற்றை பயிரிடலாம்.

செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி)

இந்த மாதத்தில் செடி முருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கங்காய், பூசணி, புடலை, அவரை, மிளகாய், நெல், பருத்தி போன்றவற்றை பயிரிடலாம்.

அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி)

இந்த மாதத்தில் செடி முருங்கை, கத்தரி, முள்ளங்கி, வெங்காயம், கொத்தவரை, சுண்டல், நெல், பருத்தி போன்றவற்றை பயிரிடலாம்.

நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை)

இந்த மாதத்தில் செடி முருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி, மிளகாய், கொத்தவரை, சூரியகாந்தி, சுண்டல், நெல், நாட்டுச்சோளம், தென்னை, கரும்பு, வாழை, மரவள்ளி போன்றவற்றை பயிரிடலாம்.

டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி)

இந்த மாதத்தில் கத்தரி, சுரைக்காய், தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய், சுண்டல், நெல், நாட்டுச்சோளம், தென்னை, வாழை, மரவள்ளி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

Categories

Tech |