தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இவ்வாறு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யக்கூடாது என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நாளான 19ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். விடுப்பு எடுக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.