வீட்டு வேலைக்காரர் ஒருவர் கணவன்,மனைவி இருவரையும் சுத்தியலால் அடித்துக் கொன்று பணத்தை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் நகரின் புறநகர் பகுதியில் உள்ள பிடாடி அருகே உள்ள வில்லாவில் இரட்டைக்கொலை நடந்துள்ளது. இந்த பகுதியில் ரகுராஜன்(70) மற்றும் அவரது மனைவி ஆஷா(63) என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவரது வீட்டில் வேலை செய்பவர் ஜோகிந்தர் குமார் யாதவ் (23). இவர் ஓய்வுபெற்ற விமானப்படை விமானிஆவார். இவரது வேலை தோட்டத்தையும், வீட்டு நாய்களையும் பராமரித்து வருவதாகும்.
இந்நிலையில் ரகுராஜன் மகள் டெல்லியிலிருந்து தனது பெற்றோருக்கு தொலைபேசியில் அழைத்தபோது பதில் வரவில்லை. இதனால் இவர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பின் ரகுராஜ் அவரது மனைவி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த விசாரணையில் போலீசாருக்கு வீட்டு வேலைக்காரன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
ஏனென்றால் அவர் கொலை சம்பவத்தை அடுத்து வேலைக்கு வராமல் காணாமல் போயுள்ளார்.இந்நிலையில் போலீசார் வேலைக்காரனை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரது அலைபேசியின் மூலம் இருப்பிடத்தை அறிந்து அவரை கைது செய்தனர். பின்னர் இவரை விசாரித்ததில் தம்பதிகளை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த ரூ.56 ஆயிரம் பணத்தையும் திருடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.