Categories
உலக செய்திகள்

அய்யோ பாவம்…. இளவரிக்கு கொரோனா பாதிப்பு… அதிர்ச்சியில் அரச குடும்பம்….!!

ஜப்பான் இளவரசி யாகோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஜப்பான் நாட்டின் இளவரசி யாகோ ஆவர். இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யகோவிற்கு நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜப்பான் அரசு குடும்பத்தில் முதல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது  இளவரசி யாகோ என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |