கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.பந்தாரப்பள்ளி தவிடு செட்டி வட்டம் பகுதியில் விவசாயியான கோபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபால் தனது விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றின் அருகாமையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது தவறி உள்ளே விழுந்துள்ளார்.
அதன்பின் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் முதியவரை கயிறு கட்டி உயிருடன் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.