Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் ‘டைவ்’ அடித்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கிணற்றுக்குள் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள தோட்டத்து விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மகேந்திரன் கிணற்றில் டைவ் அடித்து விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் கிணற்றிலிருந்து மகேந்திரன் வெளியே வராததால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கிணற்றுக்குள் இறங்கி தேடினர். இதனையடுத்து மகேந்திரனை காணாததால் இதுகுறித்து அவர்கள் பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மகேந்திரனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். அதன்பின் தீயணைப்பு துறையினர் மறுநாள் காலையில் மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி மகேந்திரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் கிடந்த மகேந்திரனின் சடலத்தை மீட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் மகேந்திரனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |