மாணவர்களுக்கு மத்தியில் தனி ஒரு பெண்ணாக எதிர்த்து கோஷமிட்ட மாணவிக்கு 5 லட்சம் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்துக்குள் வந்துள்ளார். கல்லூரிக்குள் வந்த அந்த மாணவியை பல மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர்.
இந்த சூழலில் அந்த மாணவி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது: நான் கவலைப்படவில்லை பர்தா அணிந்ததால் அவர்கள் என்னை கல்லூரிகள் அனுமதிக்கவில்லை. நான் அசைன்மென்ட் ஒப்படைப்பதற்காக கல்லூரிக்கு வரும் போது அவர்கள் என்னை சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் எனக் கோஷமிட்டார்கள். பதிலாக நானும் அல்லா ஹு அக்பர் என கோஷமிட்டேன்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் என்னை ஆதரித்து பாதுகாப்பாக கூட்டிச் சென்றார்கள். அந்த குழுவில் 10 பேர் 10% எங்கள் கல்லூரி மாணவர்கள் என்றும் மீதமுள்ள வெளியாட்கள் எனவும் அந்த மாணவி கூறினார். இந்நிலையில் மாணவியின் துணிச்சலை பாராட்டிjamiatul ulema-e-Hind அமைப்பின் தலைவர் அந்த மாணவிக்கு 5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என தெரிவித்தார். இதற்கிடையில் கல்லூரிக்குள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பதற்றத்தை தரும் வகையில் மாணவர்கள் நடந்துகொண்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.