Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. நாளை முதல் திருப்புதல் தேர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கண்டிப்பாக 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 (நாளை) தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதில் பிப்ரவரி 10-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற இருப்பதால் அன்று நடைபெறும் திருப்புதல் தேர்வு மட்டும் 17ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு முடிந்தபின் அதன் விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கியது.

தற்போது இந்த திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9-17 ஆம் தேதி வரையிலும் (பிப்..10 தேர்வு கிடையாது), இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரையும் நடைபெறும். 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9-16 வரையிலும், இரண்டாவது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5 ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |