Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு…. இப்படி செஞ்சா தடுக்கலாம்…. நீதிபதி அதிரடி உத்தரவு…..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளிட்ட ஏழு கோவில்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்களில் அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகள் மூலம் நபர்கள் கொள்ளையடிப்பதாகக் கூறி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இந்த நிலங்களை மீட்டு, கோவில்களின் செயல்பாட்டுக்கு பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர், ஆய்வு கூட்டம் நடத்தியதாகவும், சட்டவிரோத குவாரிகளுக்கு கனிமவளத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் நிலங்களில் நடைபெறும் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் .

மேலும் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற மற்றும் சிவில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கைகளை உடனே எடுக்கவும் சம்மந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டார். அதன்பின் கோவில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடக்கும் சம்பவத்தில் அரசு ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா..? என்பதை கண்டறிய விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையில் உன்னதமான ஆன்மாக்கள் கோவில்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் சொத்துக்களை தானமாக வழங்கி இருக்கின்றனர். அதை பாதுகாக்க வேண்டியது கோவில் நிர்வாகத்தின் கடமை என்று நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கோவில் சொத்துக்களை முறையாக பராமரிக்க தவறும் அதிகாரிகளே, இந்த குறைபாடுகளுக்கு பொறுப்பாக்க வேண்டும். கோவில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அவை கொள்ளையடிக்கப்படுகிறது. தற்போது இந்து சமய அறநிலையத் துறை சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். ஆனால் அது போதுமானது அல்ல.

கோவில் சொத்துக்களை மீட்கும் முயற்சியில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் தனி குழு நியமித்து திறமையாகவும், விரைவாகவும் இந்த சொத்துக்கள் மீட்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகளவில் முறைகேடுகளை அனுமதிப்பதன் வாயிலாக அரசு துறை தனது கடமையை தவறவிட்டதால், அவர்களே இதற்கு பொறுப்பாவர். அதன்படி  கொள்கை மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் சொத்துக்களை மீட்பதுடன், சம்மந்தபட்ட நபர்களிடம் இருந்து வருவாய் இழப்பை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்” உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்..

Categories

Tech |