புதிய வகை வைரஸால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியா நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நைஜீரியாவில் கொரோனா வைரஸுக்கு அடுத்ததாக புது விதமான லாஸ்சா என்ற வைரஸ் பரவி வருகிறது. அந்த வைரஸ் எலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்படுகிறது.
இந்த வைரஸ் 21 முதல் 30 வயதில் உள்ளவர்களையே பெரிதளவு பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வைரஸ் நைஜீரிய நாட்டில் 36 மாநிலங்களில் பயங்கரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து லாஸ்சா வைரஸால் 40 பேர் உயிரிழந்ததாகவும் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.