Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால படிக்க வைக்க முடியல…. மகளை பறிகொடுத்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

மேற்படிப்பு படிக்க முடியாததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு சினேகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவர் பி.காம் படித்துள்ள நிலையில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என தந்தையிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து போருலாதரான சூழ்நிலை காரணமாக மேற்படிப்பு படிக்க வைக்க முடியாது என நாகராஜ் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சினேகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அவரது பெற்றோர் உடனடியாக மகளை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி சினேகா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அல்லிநகரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |