Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த மகன்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லிங்கம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக மினி டெம்போ ஓட்டி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் பல இடங்களில் பெண் பார்த்தும் லிங்கத்திற்கு ஏற்ற வரன் அமையாததால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் லிங்கம் மது போதைக்கு அடிமையாகி கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு லிங்கம் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாயார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு லிங்கத்தின் தாயார் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |