Categories
அரசியல்

பெரம்பலூரில் ஒரு சுவாரஸ்யம்?…. “ஒரே வார்டில் போட்டியிடும் கணவன்-மனைவி”…. கவனம் ஈர்த்த தம்பதி….!!!!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து நாளை வேட்புமனு பரிசீலனை செய்யப்பட உள்ளது. மேலும் பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் துறைமங்கலம், அரணாரை, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 21-வார்டு உறுப்பினர் பதவி உள்ளது. மேலும் லப்பைகுடிகாடு, பூலாம்பாடி, அரும்பாவூர், குரும்பலூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் தலா 15 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளது. இந்த பகுதிகளில் திமுகவை தவிர காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் மாணவர்கள், திருநங்கைகள், பெண்கள் என சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பெரம்பலூரில் சுயேட்சையாக கணவன்-மனைவி இருவரும் 20-வது வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது பெரம்பலூர் நகராட்சியில் சுரேஷ்-இளமதி என்ற தம்பதி ஒன்றாக வந்து 20-வது வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எனவே பெரம்பலூர் நகராட்சியில் எதிரெதிராக ஒரே வார்டில் கணவன் மனைவி இருவரும் போட்டியிடுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |