Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காரணை புதுச்சேரி கோகுலம் காலனி கிருஷ்ணன் தெருவில் செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிளாம்பாக்கத்திலுள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் செல்வியின் மீது பலமாக மோதியது. இதனால் செல்வி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார்.

உடனே அக்கம்பக்கத்தினர் செல்வியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |