Categories
Uncategorized உலக செய்திகள்

5 ராக்கெட் குண்டுகளுடன்…. “மீண்டும் தாக்குதல்”…. விமான நிலையத்தில் பரபரப்பு.!!

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முறையாக  நேற்று  ராக்கெட் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது  குறிவைத்து கடந்த வாரம் பயங்கரவாதிகள் தொடர்ந்து 6 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் . இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈராக் ஏர்வேஸ்  நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானங்கள் சேதமடைந்தன.

இந்நிலையில் நேற்றும்  பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல்   நேற்று  அதிகாலை 5 மணியளவில் நடைபெற்றதாகவும்,  5 ராக்கெட் குண்டுகள் விமான நிலையத்தை  தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும்  தெரியவில்லை. மேலும் இதுவரை   இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை  என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |