தேர்தல் முதல்கட்ட பயிற்சியில் ஆயிரக்கணக்கான அலுவலர்கள் கலந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராமநாதன் செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்து தேர்தல் பணியாளர்களுக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது தாசில்தார் மாணிக்கவாசகன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
அதில் அதிகாரிகள் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இந்நிலையில் வாக்காளர்களை எப்படி கையாள வேண்டும், மாற்றுத்திறனாளியாக வரும் வாக்காளர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் வகுப்புகள் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எப்படி என்ன வேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளனர் . இதில் ஆயிரக்கணக்கான அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளனர்.