Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே உஷார்…. சத்தமாக பப்ஜி விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த கதி…. பெரும் பரபரப்பு….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் தூங்கவிடாமல் சத்தம் போட்டுக் கொண்டிருந்த பஜ்ஜி விளையாடிய இளைஞரை முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் அருகே கார்த்திக் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டு சத்தம் போட்டுக்கொண்டு பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார்.

இவரை ஏற்கனவே வீட்டின் அருகில் இருக்கும் ராமசாமி என்ற முதியவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல கார்த்திக் மற்றும் முதியவருக்கு இடையே வாக்குவாதம். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. உடனே வீட்டிற்குள் சென்ற முதியவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கார்த்திக்கை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |