வங்கிகளின் சிறு குறு தொழில் முனைவோர்களாக பதிவு செய்தவர்கள், தனிநபர் முதலாளிகள், கூட்டு நிறுவனங்கள், பதிவு செய்த நிறுவனங்கள், முத்ரா திட்டத்தின் கீழ் இணைந்தவர்கள் என பலருக்கும் இந்த கடன் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சிறு குறு தொழில் முனைவோருக்கு கடன் நிலுவை தொகையில் 20% வரை அல்லது 25 கோடி வரை கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 3 லட்சம் கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவசர கால கடன் திட்டம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருமானம் குறைந்த நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு உதவும் விதமாக அரசுக்கு கால அவகாசம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.