ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவிகள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் 2 மாணவிகள் அதே பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நண்பர்களான 3 பேரும் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து 3 பேரும் நண்பர்களுடன் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றனர். அதன் பின் நீண்ட நேரமாகியும் 3 பேரும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் 3 பேரையும் அவர்களது பெற்றோர், உறவினர் மற்றும் அக்கம் பக்கம் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர் சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவிகள் எங்கு சென்றனர்? யாரேனும் கடத்திச் சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.