Categories
மாநில செய்திகள்

“கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு….!!” இனிமேல் இதற்கெல்லாம் அனுமதி….!!

கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டன.

இன்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக எப்எல் 2 வகை பொழுதுபோக்கு மன்றங்கள் காலை 11 முதல் இரவு 11 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும் உணவகங்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒப்பந்ததாரர் மூலம் நடத்தப்படும் உணவகங்கள் ஆகியவை காலை 1 முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |