Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த ஆம்புலன்ஸ்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது ஆம்புலன்ஸ் மோதி அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள குச்சனூர் பகுதியில் பீமராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பீமராஜ் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது உறவினரின் வாகன பராமரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேனி-கம்பம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் திடீரென கட்டுபாட்டை இழந்து பீமராஜ் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் பலத்தகாயமடைந்த பீமராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பீமராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பீமராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |