Categories
அரசியல்

“வீண் வதந்தி பரப்பாதீங்க!”…. அறிக்கை வெளியிட்ட விஜய் மக்கள் இயக்கம்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் உத்தரவின் பேரில், விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் எங்கள் இயக்கத்தினர் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் என வீண் வதந்தி பரப்பாதீர்கள் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கண்டிப்பாக போட்டியிடுகிறார்கள். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு அதிக இடங்களை வென்று காட்டியதுபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |