Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏணியை தூக்கி சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் இரும்பு ஏணியை முனியப்பன் மாடிக்கு தூக்கி சென்றுள்ளார். அப்போது மேல சென்ற மின் கம்பி உரசியதால் எதிர்பாராதவிதமாக முனியப்பன் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது.

இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முனியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முனியப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |