Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… 10-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலின் 2-ம் அலை தாக்கம் குறைந்ததால் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கியது.

இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பிப்ரவரி 1 முதல் 1- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பது தேர்தலுக்காகவே என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் புதிய வைரஸ் பரவி வருவதாக கூறி மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிகள் திறப்பது தொடர்பாக மீண்டும் தமிழக அரசு ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவு எடுக்க வேண்டும். மேலும் பொதுத் தேர்வு எழுதும் 10- 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்றும் விஜயகாந்த் அவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

Categories

Tech |