Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை?…. அரசு அதிரடி…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை இந்த விடுமுறையை நீட்டிக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |