Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

2 வருடங்களாக அவதிப்பட்ட முதியவர்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வேலூர் அம்பேத்கர் தெருவில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முனியப்பன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் வயிற்று வலி சரியாகாததால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |