Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இந்த முறை…. அமைச்சர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடக்குமா அல்லது ஆப்லைனில் நடைபெறுமா என்று மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். நேற்று ஊரடங்கு தொடர்பான அரசு அறிவிப்பில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கலகங்களில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. ஆகவே தேர்வுகள் முடிந்த பின் கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு முன்பே அறிவித்தபடி ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது “கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவலால் பிப்ரவரி 1ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெறும் என ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். ஆனால் தற்போது கல்லூரிகள் திறக்கப்படுவதால் ஆன்லைன் தேர்வில் மாற்றம் ஏற்படுமோ என்று பலரும் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக நான் முதல்வர் ஸ்டாலினிடம் பேசியபோது அவர் கல்லூரிகளில் முதல், மூன்றாம் மற்றும் ஐந்தாம் பருவ செமஸ்டர் தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் மூலமாக நடைபெறும் என தெரிவித்தார்.

ஆகவே ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறுவதில் எவ்வித மாற்றமும் இல்லை” என்று கூறினார். முன்பாக செப்டம்பர் மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் பருவத் தேர்வுகள் நேரடித் தேர்வாக நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆன்லைன் வழியே படித்துவிட்டு தேர்வை மட்டும் ஆப்லைனில் நடத்துவதா என்று போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் நடவடிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் இந்த முறை அதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாத வண்ணம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

Categories

Tech |