பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு ஏ.ஐ.டி.யு. சி. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மண்டல தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 36 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு டி.ஏ உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவா, மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாவட்ட தலைவர் யுவராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார், இந்து இளைஞர் முன்னணி அமைப்பாளர் ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.