Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

MBBS சீட்டை விட்டுக்கொடுத்தார் 61 வயது மாணவர்… பின்னணி என்ன?…. வெளியான தகவல்….!!!!!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவபிரகாசம்(61) கடந்த வருடம் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்ததால் இன்று நடைபெறும் கவுன்சிலிங்கில் பங்கேற்று உள்ளார். ஆனால் அவருடைய மகன், இந்த கவுன்சிலிங்கில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் நீங்கள் மருத்துவர் ஆனால் 10- 15 வருடங்கள் தான் மருத்துவராக வேலை பார்க்க முடியும். இதுவே வேறொரு அரசு மாணவனுக்கு வாய்ப்பு கிடைத்தால் 40 ஆண்டுகள் பணியாற்றலாம் என்று மகன், தந்தையிடம் கூறியுள்ளார். ஆகவே நீட் தேர்வில் வெற்றிபெற்ற சிவபிரகாசம் ஆசை நிறைவேறுமா…? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்நிலையில் சிவபிரகாசம் எம்பிபிஎஸ் சீட்டை விட்டுக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். மகனின் கோரிக்கையை ஏற்று சிவபிரகாசம் விட்டுக் கொடுத்ததால் மற்றொரு மாணவருக்கு சீட் கிடைக்கும். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து மருத்துவ கலந்தாய்வுக்கு வந்திருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவபிரகாசம், கல்லூரியை தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |