Categories
மாநில செய்திகள்

“தமிழகம் முழுவதும் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்?”…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஆன்லைன் மூலம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜனவரி 31-ஆம் தேதியுடன் விடுமுறை முடிவுக்கு வர உள்ளதால் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முதலமைச்சரிடம் பரிந்துரை வழங்கியுள்ளோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடைபெறும் என்றும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பு முறையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |