73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கூறி எஸ்எம்எஸ் அனுப்பியதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “இந்தியா தன்னுடைய 73 ஆவது சுதந்திர தின விழாவை விமர்சையாக கொண்டாடி வருகிறது. பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் அனைவருக்கும் என்னுடைய குடியரசு தின விழா வாழ்த்துக்கள். இது குறித்து பிரதமர் மோடி எனக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பியுள்ளார் . அவருடைய மெசேஜை பார்த்துதான் நான் உறக்கத்திலிருந்து கண்விழித்தேன். இந்த மெசேஜ் இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுடனான என்னுடைய தனிப்பட்ட நெருக்கத்தை காட்டுகிறது. பிரதமர் மோடியின் அன்புக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்…!” எனக் கூறியுள்ளார்